வேதம் எல்லோராலும கற்கப்படலாம் என்றால், வேதத்தின் ஒலியா அல்லது பொருளா எதைக் கற்பது என்ற கேள்வி எழுகிறது. இன்று வேதம் கற்கும் பிராமணர்கள் பெரும்பாலும் வேதத்தின் ஒலியை மட்டுமே கற்று அதை பிழையின்றி ஒப்புவிக்கும திறமை பெற்றுள்ளனர். இந்தப் பெரும்பான்மையருக்கு தாங்கள் சொல்லும் மந்திரங்களின் பொருள் தெரியாது. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதும இல்லை. வேத மந்திரஙகளின் ஒலியே இறைவனின் மூச்சுக் காற்று. அதை ஒலித்தாலே அதன் அதிர்வலைகள் உலகில் நன்மையை விளைவித்துக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.
முற்காலத்தில் வேதம் பயின்றவர்கள் அதன் உரையாகிய பாஷ்யமும் சேர்த்தே பயின்றனர். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்திரமேரூர்க் கல்வெட்டிலிருந்து ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு நிற்பவர் வேத பாஷ்யம் படித்திருந்தால் அப்பதவிக்கு உண்டான பொருளாதார நிபந்தனை அவருக்குத் தளர்த்தப்பட்டதாக அறிகிறோம். ஆனால் ஒரு கால கட்டத்தில் மக்கள் வேதத்தின் பொருளை விட அதன் ஒலியே முக்கியத்துவம் உடையது என்று கருதத் தொடங்கினர். இது இறைவன் சம்பந்தப்பட்டது, இதைச் சொன்னாலும் புண்ணியம், கேட்டாலும் புண்ணியம் என்ற கருத்தே பரவியது. பொருள் உணர்ந்தவர்களும் அதைப் பிறர்க்குச் சொல்ல முயலவில்லை. கண்மூடித்தனமாக நம்பினாலும், மக்கள் இறை உணர்வைத் தானே கொண்டிருக்கிறார்கள், அந்த நம்பிக்கையைக் கெடுப்பானேன் என்ற ரீதியில் வாளா இருந்து விட்டனர்.
Popular Posts
-
இஸ்லாமியர்களின் வேதம் எது என்றால் குர் ஆன் என்று எல்லோரும் சொல்வார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அந்த வேதத்தை ஓதவும் அறிந்துள்ளனர். இஸ்லாமிய...
-
சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும் , பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹி...
-
இந்திரனால் கொல்லப்பட்ட விருத்திராசுரன் , தசரதன் உதவியோடு அழிக்கப்பட்ட சம்பராசுரன் ஆகியோரது கதைகளை நாம் புராணங்களில் பா...
-
ராட்சசரைப் போலவே தேவர்களால் அழிக்கப்படத் தக்க வேறு ஒரு கூட்டம் உண்டு . இவர்கள் தஸ்யு என்று அழைக்கப்படுகிறார்கள் . தஸ்யு என...
-
சற்றே வித்தியாசமான மாணவன். இளமையில் கல்லாது விட்டுவிட்டு, முதுமையில் கற்க விழைபவன். வேதம் சம்பந்தமான என் சிந்தனைகளை வாய்ப்புக் கிடைத்தபோதெல்...
-
வேதம் எல்லோராலும கற்கப்படலாம் என்றால், வேதத்தின் ஒலியா அல்லது பொருளா எதைக் கற்பது என்ற கேள்வி எழுகிறது. இன்று வேதம் கற்கும் பிராமணர்கள் பெரு...
-
வசு ருத்ரர் ஆதித்யர் என்ற மூன்று தேவக் கூட்டத்தாரையும் சேர்த்துச் சொல்லும் ரிக் மந்திரங்கள் பல உண்டு. இவை தனித் தனிக் குழுக்கள் என்ற...
-
மாயையாவது யாதெனில் ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக் கொள்ளும் தீமை ..... இந்த மாயை என்ற ராக...
-
பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும்...
-
வருணன் , மித்ரன் , அர்யமான் , பகன் , அம்சன் என்ற ஐந்து தேவர்களை ஆதித்யர் என்று வேதம் சிறப்பித்தாலும் பகனுக்கும் அம்சனுக்கும் தனியான ...
No comments:
Post a Comment