Popular Posts

Friday, December 31, 2010

வேதத்தின் ஒலியா, பொருளா, எதைக் கற்பது?

வேதம் எல்லோராலும கற்கப்படலாம் என்றால், வேதத்தின் ஒலியா அல்லது பொருளா எதைக் கற்பது என்ற கேள்வி எழுகிறது. இன்று வேதம் கற்கும் பிராமணர்கள் பெரும்பாலும் வேதத்தின் ஒலியை மட்டுமே கற்று அதை பிழையின்றி ஒப்புவிக்கும திறமை பெற்றுள்ளனர். இந்தப் பெரும்பான்மையருக்கு தாங்கள் சொல்லும் மந்திரங்களின் பொருள் தெரியாது. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதும இல்லை. வேத மந்திரஙகளின் ஒலியே இறைவனின் மூச்சுக் காற்று. அதை ஒலித்தாலே அதன் அதிர்வலைகள் உலகில் நன்மையை விளைவித்துக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள்.

முற்காலத்தில் வேதம் பயின்றவர்கள் அதன் உரையாகிய பாஷ்யமும் சேர்த்தே பயின்றனர். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்திரமேரூர்க் கல்வெட்டிலிருந்து ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு நிற்பவர் வேத பாஷ்யம் படித்திருந்தால் அப்பதவிக்கு உண்டான பொருளாதார நிபந்தனை அவருக்குத் தளர்த்தப்பட்டதாக அறிகிறோம். ஆனால் ஒரு கால கட்டத்தில் மக்கள் வேதத்தின் பொருளை விட அதன் ஒலியே முக்கியத்துவம் உடையது என்று கருதத் தொடங்கினர். இது இறைவன் சம்பந்தப்பட்டது, இதைச் சொன்னாலும் புண்ணியம், கேட்டாலும் புண்ணியம் என்ற கருத்தே பரவியது. பொருள் உணர்ந்தவர்களும் அதைப் பிறர்க்குச் சொல்ல முயலவில்லை. கண்மூடித்தனமாக நம்பினாலும், மக்கள் இறை உணர்வைத் தானே கொண்டிருக்கிறார்கள், அந்த நம்பிக்கையைக் கெடுப்பானேன் என்ற ரீதியில் வாளா இருந்து விட்டனர்.

No comments:

Post a Comment