Popular Posts

Friday, December 24, 2010

வேதம் கற்கத் தடை விதிக்க முடியாது.

மாக்ஸமுல்லருக்கு முன்னரே பல ஐரோப்பியர்கள் வேதத்தைக் கற்று மொழிபெயர்த்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.மாக்ஸ்முல்லரோ தன் வாழ்நாளின் பெரும்பகுதியை - சுமார் 45 வருடங்கள் என்று நினைவு- வேத ஆராய்ச்சியிலேயே செலவிட்டவர். இந்து சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் இந்து பாரம்பரியம் இல்லாதவர்களும் வேதத்தைக் கற்று அச்சிட்டுப் புத்தக வடிவில் எல்லோருக்கும் கிடைக்கச் செய்துள்ளனர். இன்று இணைய தளத்திலும் வேத இலக்கியம் கிடைக்கும் போது வேதம் கற்கக் கூடாது என்று யார் யாருக்குத் தடை விதிக்க முடியும்?

No comments:

Post a Comment