பொருளை விட ஒலியே முக்கியம் என்று மக்கள் கருதும் நிலை ஏன் வந்தது? வேதத்தை முழுமையாக அறிந்து கொள்ள 48 ஆண்டுகள் பயில வேண்டும் என்பது வழக்கு. முஸ்லீம்கள் வடநாட்டை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு, தென்னாட்டிலும் ஊடுருவத் தொடங்கிய கால கட்டத்தில் இவ்ளவு நீண்ட காலம் கல்வி கற்பதற்குத் தேவையான சமூக அமைதியோ, பாதுகாப்போ, அரச ஆதரவோ இல்லாத சூழ்நிலை. எந்த நிமிடம் மாற்று மதத்தினர் வந்து பாடசாலையைத் தாக்குவார்களோ, எப்பொழுது உயிர் போகுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் குறுகிய காலத்தில் வேதத்தின் மூலத்தை மட்டும் கற்றுக் கொண்டு பாடசாலையிலிருந்து வெளியேறுவோம், பின்னால் ஒரு பாதுகாப்பான காலம் வரும், அது வரை இந்த மூலத்தைப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சேர்த்தால் போதும் என்று கருதினர். பதஞ்ஜலி குறிப்பிட்ட சாகைகளில் பெரும்பகுதி இந்தக் காலத்தில் தான் அழிந்திருக்க வேண்டும்.
இத்தகைய சூழ்நிலையில் தான் அதுவரை எழுத்தில் வடிக்கப்படாமல் இருந்த வேத பாஷ்யத்தை (உரையை) ஸாயணர் எழுதிவைத்தார். மூலத்தை எழுதி வைத்தால் பிரதி எடுக்கும்போது தவறுகள் ஏற்பட்டுப் பெருகிக் கொண்டே போகும் என்பதால் மூலம் என்றும் எழுதாக் கிளவியாகவே இருந்து வந்திருக்கிறது.
Popular Posts
-
இஸ்லாமியர்களின் வேதம் எது என்றால் குர் ஆன் என்று எல்லோரும் சொல்வார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அந்த வேதத்தை ஓதவும் அறிந்துள்ளனர். இஸ்லாமிய...
-
சிற்சில பதங்களுக்கு சாயணாசாரியர் சொல்லும் உரை பிரத்தியக்ஷமாகப் பிழையென்று தோன்றினும் , பொதுப்படையாகச் சொல்லுமிடத்தே தற்காலத்து ஹி...
-
இந்திரனால் கொல்லப்பட்ட விருத்திராசுரன் , தசரதன் உதவியோடு அழிக்கப்பட்ட சம்பராசுரன் ஆகியோரது கதைகளை நாம் புராணங்களில் பா...
-
ராட்சசரைப் போலவே தேவர்களால் அழிக்கப்படத் தக்க வேறு ஒரு கூட்டம் உண்டு . இவர்கள் தஸ்யு என்று அழைக்கப்படுகிறார்கள் . தஸ்யு என...
-
சற்றே வித்தியாசமான மாணவன். இளமையில் கல்லாது விட்டுவிட்டு, முதுமையில் கற்க விழைபவன். வேதம் சம்பந்தமான என் சிந்தனைகளை வாய்ப்புக் கிடைத்தபோதெல்...
-
வேதம் எல்லோராலும கற்கப்படலாம் என்றால், வேதத்தின் ஒலியா அல்லது பொருளா எதைக் கற்பது என்ற கேள்வி எழுகிறது. இன்று வேதம் கற்கும் பிராமணர்கள் பெரு...
-
வசு ருத்ரர் ஆதித்யர் என்ற மூன்று தேவக் கூட்டத்தாரையும் சேர்த்துச் சொல்லும் ரிக் மந்திரங்கள் பல உண்டு. இவை தனித் தனிக் குழுக்கள் என்ற...
-
மாயையாவது யாதெனில் ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா சக்தியால் ஏற்படுத்திக் கொள்ளும் தீமை ..... இந்த மாயை என்ற ராக...
-
பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும்...
-
வருணன் , மித்ரன் , அர்யமான் , பகன் , அம்சன் என்ற ஐந்து தேவர்களை ஆதித்யர் என்று வேதம் சிறப்பித்தாலும் பகனுக்கும் அம்சனுக்கும் தனியான ...